மதுக்கூர், ஜூலை. 09 –

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் படி உரியக் காலத்தில்  அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்தில் இவ்வருடம் 1300 எக்டர் குருவை சாகுபடி பரப்பு எதிர் பார்க்கப்படுவதாக வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுகிறது. இந்நிலையில் இதுவரை கடந்த ஜூன் மாதம் முடிய  618 எக்டரில் குருவை சாகுபடி முடிந்துள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் 700 எக்டர் எதிர்பார்ப்பு உள்ளதாக வேளாண்மைதுறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறுவை தொகுப்பு திட்டம்.. மாற்று பயிர் திட்டம்… வேப்பங்குளம் முனியன் அவர்களுக்கு உளுந்து விதை வழங்கப்பட்டது.

எனவே குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில்  ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி மற்றும் 25 கிலோ பொட்டாஸ் உரமானது உழவன் செயலில் பதிவு செய்து ஆவணங்கள் சரிபார்த்த பின் அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளில் இன்றைய தினம் மதுக்கூர் வடக்கு, சொக்கனாவூர், புளியக்குடி, பழவேற்காடு, ஒலயகுன்னம் மற்றும் காரப்பங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 13 பேருக்கு புதுக்கோட்ட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மானியத்தில் உரத்தினை வழங்கினார்.

பழவேறிகாடு விவசாயிக்கு நிலக்கடலை விதை மானியத்தில் வழங்கப்பட்டது.

மேலும், குருவை தொகுப்பு திட்ட மாற்று பயிர் மானியமாக வாட்டா குடியைச் சேர்ந்த நடேசன் என்ற விவசாயி கேழ்வரகு  பயிர்  செய்திடவும் வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் வயலில் உளுந்து சாகுபடிக்கும், அத்திவெட்டி மேற்கு கிராமத்தை சேர்ந்த விவசாயி வைரம்பாள் நிலக்கடலை சாகுபடிக்கும் 50% மானியத்தில் இடுபொருள்களை வழங்கினார்.

நுண் நீர் பாசன கருவிகள் கருத்து காட்சி.. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

தொடர்ந்து, மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொண்டார். மேலும் வேளாண் பொறியியல் துறையில் இருந்து பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் செங்கோல் கலந்து கொண்டு குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கருவிகள் அதற்கான மானியங்கள் பெறும் வழிமுறைகள் பற்றி விளக்கி கூறினார்.

விவசாயிகள் . தேவையான விளக்கம் பெறும் வகையில் நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் நீர் தெளிப்பான் பவர்டில்லர், விசைத்தெளிப்பான்கள் போன்றவற்றின் விலை மற்றும் மானியம் குறித்து மன்னார்குடி ஏஜிஎஸ் இரிகேசன் பாண்டித்துரையும், ஹோண்டா மோட்டார் நிறுவனம் தென்னை மரங்களுக்கு பயன்படும் விசைத்தெளிப்பான்கள் ஆயில் இன்ஜின்கள் மற்றும் சிறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையிலான மினி பவர் டில்லர் போன்றவை குறித்து நிறுவன கள அதிகாரி மதியும் விவசாயிகளுடன் சிறப்பாக கலந்துரையாடி விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ முன்னிலை வகிக்க, சொக்கநாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, காடந்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் காரப்பங்காடு பெருமாள் ஆகியோர் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் கார்த்திக், தினேஷ், முருகேஷ், சுரேஷ் மற்றும் ஜெரால்ட் மற்றும் பெரிய கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்  செய்திருந்தனர். குருவை தொகுப்பு திட்ட விழாவில் அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி மற்றும் ராஜு ஆகியோர் கருத்து காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here