கும்பகோணம், ஜூலை. 18 –

கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், சபிதாவின் கணவர் பெங்களூரில் லோடு வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினையின் காரணமாக அடிக்கடி சண்டையிட்டு கொண்டதாக தெரிய வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சொந்த ஊரில் இருந்து சிலதினங்களுக்கு முன்பு சபிதாவின் கணவர் ராஜா வேலைக்காக வெளியூருக்கு புறப்பட்டு சென்றதாகவும், சம்பவம் நாளன்று இருவரும் செல்போனில் வெகு நேரமாக ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டி சண்டைப் போட்டுக் கொண்டதாக தகவல் தெரிய வருகிறது.

அதனால் மனமுடைந்த சபிதா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாத கூறப்படுகிறது. அத்தகவலயறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தநல்லூர் காவல்துறையினர் உயிரிழந்த இளம் பெண் சபிதாவின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here