காஞ்சிபுரம், ஜூலை. 25
இன்று மாலை முதல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது.
காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிகரை ஆகிய பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு ஓடுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்துடன் அச்சாலைகளை கடந்து செல்கின்றனர்.