தஞ்சாவூர், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சாலை போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே போடப்பட்டுள்ள தார்சாலைகளை பெயர்த்து விட்டு (miling) புதிதாக தார்சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது.

அதற்காக அப்பகுதியில் உள்ள சாலையில் சிறு ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஜல்லி பரப்பி தண்ணீர் ஊற்றாமல் இருப்பதால் கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதில் இருந்து கிளம்பும் தூசு பறந்து சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதனால் அப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here