அம்பத்தூர். ஏப். 11 –
நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து லட்ச ரூபாய் வழிப்பறி செய்த இரண்டு நபர்களை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.