pic file copy

வெங்கல், மார்ச். 01 –

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன்  உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.

  சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவோடு பூச்சி மருந்தை கலந்துக் குடித்துவுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவரை 108 ஆம்பூலஸ் மூலம் கொண்டு சென்று திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் முதல்கட்டச் சிகிச்சை அளிக்கப் பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த இருதினங்களாக சிகிச்சைப் பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார்.

   இச்சம்பவம் தொடர்பாக உலகநாதனின் பெரியப்பா மகன்    ஊத்துக்கோட்டை தாலூகா பெருமாள்கோவில் தெருவில் வசித்துவரும் தங்கவேல் என்பவரின் மகன் ஆறுமுகம் வயது 45 என்பவர் வெங்கல் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் இவ்வாறு குறிப்பிட்டுவுள்ளார் மேலும் அப்புகார் மனுவில் தனது சித்தப்பா மகன் உலகநாதனின் உடலை உடல்கூறு ஆய்வு செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அதில் தெரிவித்துள்ளார். அப்புகார் மனுவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here