கடம்பத்தூர், பிப். 28 –

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் குமுதவேல் வசித்து வருகிறார். இந்திலையில் அவரின் மகன் கார்திக் வயது 31 என்பவர் கடந்த பிப் 26 அன்று தனது ஹீரோ ஹோண்டா பேசன் ப்ரோ என்ற இருசக்கர வாகனத்தில் மதியம் சுமார் 2 மணியளவில் வேலை தொடர்பாக புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஏரியில் நடைப்பெற்று வரும் பணியை பார்வையிட்டு வீடு திரும்பி வரும் போது காவங்கொளத்தூர் புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் கிராமசாலை செல்லும் வளைவின் எதிரே அமைந்துள்ள   மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 

   இவ்விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த கார்த்திக்கிற்கு முகத்திலும் உடல் முழுவதிலும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு, படுகாயங்களுடன் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இவ்விபத்துக்குறித்து கார்த்திக்கின் தந்தை குமுதவேல் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here