திருவாரூர், ஜூன். 13 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாஸ்கரன் வயது 38 இவர் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில், சிறுமி நன்னிலம் காவல்நிலையத்தில் போன் வாயிலாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் காவலர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர் .

சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைய இன்னும் ஏழு நாட்கள் உள்ளது எனவும் அந்த சிறுமிக்கு இந்த திருமணத்திற்கு விருப்பம் இல்லை என சிறுமி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here