திருவண்ணாமலை டிச.8-

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், வேளாண் அலுவலர் ஆர்.ஷோபனா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி.ஜீவா, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் என்.ஆர்.முருகன்,  மற்றும் துரிஞ்சாபுரம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சாலையனூர் எம்.சேகர், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.சந்திரசேகர், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேதமடைந்துள்ள மற்ற பயிர்களைகயும் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழக்கிறது. கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திப்படுகிறது. அதன் எண்ணிக்கையை 3-ஆக உயர்த்த வேண்டும். ஏரிகளில் மீன் வளர்க்க அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளதால், ஏரியின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். நீர் பிடிப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, உடனடியாக மாற்று இடம் கொடுத்த பிறகு, அவர்களை வெளியேற்ற வேண்டும். நாயுடுமங்கலம் – ஆர்ப்பாக்கம் இடையே சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. அப்பணியில் பொற்குணம் பகுதியில் ஒரு கி.மீ., தொலைவுக்கு பணிகள் நடைபெறாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தடைப்பட்டுள்ள பணியை முடிக்க வேண்டும். நீர் வரத்து கால்வாய்களை தூர் வார வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும்” என்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here