பொன்னேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி, பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஜனபன்சத்திரம், சிறுவாபுரி, ஆரணி, ஆண்டார்குப்பம், ஜெகநாதபுரம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அதில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாமக மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழகச் செயலாளர் சங்கர்ராஜா, ஆர்,எம்,ஆர், ஜானகிராமன், அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார், நந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.