கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுவரை கரும்பு விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டியை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பேட்டி நாக முருகேசன் -திருமண்டங்குடி