இராசிபுரம், மார்ச். 24 –

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கு சொந்தமான லாரியில் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து 180 வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதிக்கு ஓட்டுநர் ரஜினி கண்ணன் வந்துள்ளார்.

அப்போது ஜேடார்பாளையம் பகுதியில் தாழ்வான மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியதில் வைக்கோல் கட்டுகள் மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதனை உணர்ந்த ஓட்டுனர் மேலும் தீ பரவமல் இருக்க லாரியை அங்கேயே நிறுத்தினார். மேலும், அருகே உள்ள இளைஞர்கள் உதவியோடு  எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகளை லாரியில் இருந்து கீழே தள்ளும்  பணியில் அனைவரும் ஈடுபட்டார்கள். மேலும் இவ்விபத்து தொடர்பாக ராசிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் வைக்கோல் முழுமையாக தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் லாரிக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் தீயணைத்து தடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here