காஞ்சிபுரம், ஜூலை. 29 –
தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டியை இன்று காலை 9:00 மணிக்கு, காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசன், தமிழ்நாடு பென்சிங் சங்க அடாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் நாளான இன்று மாணவியருக்கான போட்டியும், நாளை மாணவருக்கான போட்டியும் நடைபெறுகிறது. மேலும் இப்போட்டியில் மொத்தம், 200 பேர் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.