காஞ்சிபுரம், மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது.

மேலும் அச்சிறப்புமிகு விழாவில் அப்பள்ளியின் தாளாளர் சின்னப் பையன், பள்ளி நிறுவனத்தலைவர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்கள் ஸ்ரீ கல்யாணசுந்தரம், ஸ்ரீ தயாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளான சிலம்பம் கராத்தே, யோகா, குத்துச்சண்டை அத்லெடிக்ஸ் ஆகியவற்றில் தங்களது தனித்திறமைகளை வெளிப் படுத்தினார்கள்.

அவ்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் வழங்கி மாணாக்கர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவினை மேலும் சிறப்படையச் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here