செங்கல்பட்டு, டிச. 10 –

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளார். ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட சத்தத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்தவர் கடையின் உரிமையாளர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடையின் உள்ளே மர்ம நபர் ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடையை சுற்றி வளைத்த உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே பதுங்கியிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நொண்டி முருகன் என்பதும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் தொடர்புடையவரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கடைகளின் பூட்டை உடைத்து நொண்டி முருகன் ஏற்கனவே கொள்ளையடித்ததும், இரண்டாவது முறையாக திருட முயற்சித்த போது சிக்கிய போது விசாரணையில் தெரியவந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here