செங்கல்பட்டு, மே. 15 –

தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது

இச்சூழலில் வழக்கத்திற்க்கு மாறாக நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. அதனால் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடுமையான அனல் காற்று வீசியது

கோடை விடுமுறை மற்றும் வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையான நேற்று, செங்கல்பட்டு புறவழிசாலையில்  உள்ள தனியார் நீச்சல் குளத்தில் சிறார் முதல் பெரியவர்கள் வரை அங்கு குவிந்தனர்.

மேலும் கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்க அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டு தங்கள் மகிழ்வை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here