கும்பகோணம், ஜன. 4 –
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 90% செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கும் கோவாக்ஸின் தடுப்பூசி பணி நேற்று தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளி 200 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி பணி போடும் முகாமை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துவக்கி வைத்தார். கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் முழுமையாக அறிந்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள ஊக்கம் ஏற்படுத்த வேண்டும். என்று, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தொவித்தார். இந்நிகழ்ச்சி நகர செயலாளர் தமிழழகன் நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் கணேசன் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.