அயனம்பாக்கம், சனவரி. 27 –

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு அயனம்பாக்கம் அண்ணாநகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் மல்லிகா தம்பதியர்கள். இந்நிலையில் கடந்த சிலத்தினங்களுக்கு முன்பு வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி (வயது 50) திடீரென நாற்காலியில் அமர்ந்த படியே மயங்கி விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மல்லிகாவை உடனடியாக அவரது உறவினர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு நேற்று சுமார் 4 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து விட்டார்.

 

அத் தகவலை மருத்துவர் மல்லிகாவின் கணவரிடம் தெரிவித்துள்ளனர். மனைவி இறந்த அதிர்ச்சியை தாங்க முடியமல் மல்லிகாவின் கணவர்  ராஜா (வயது 60) மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  மருத்துவர் பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டார் என்ற தகவலை உறவினரிடம் தெரிவித்தனர்.

அத் துயரச் சம்பவத்தினால் அயனம்பாக்கம் அண்ணா நகர் பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here