பொன்னேரி, ஜன. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

அவருடன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பானுபிரசாத், மீஞ்சூர் ஒன்றிய கழக அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், வழக்கறிஞர் திருமலை, பொன்னேரி நகர கழக செயலாளர் செல்வகுமார், கடப்பாக்கம் ராஜா, உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here