செங்கல்பட்டு, செப். 14 –

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9- மாவட்டங்களுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

வரும் அக்டோபர் 6- மற்றும் 9 என இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.

இந் நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8  ஊராட்சி ஒன்றியத்திற்கான  வரைவு வாக்கு சாவடிகளின் பட்டியல்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார்.

அப்போது அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் பெற்று கொண்டனர். இந்த வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியீட்டின் போது செங்கல்பட்டு வட்டாச்சியர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here