திருவாரூர், டிச. 01 –
திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் தமிழக தலைவர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் திமுக விவசாய அணி செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம் பி யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ கே எஸ் விஜயன் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக கலைஞரின் திருஉருவப்படத்திற்கும் மற்றும் கலைஞரின் மனசாட்சி எனக்கூறப்படும் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநில விவசாய அணி செயலாளரும், தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ கே எஸ் விஜயன் தெரிவிக்கும் போது,
விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாததை, ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் செய்து, விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார் என்று அப்போது தெரிவித்தார்.