காஞ்சிபுரம், ஜூலை. 31 –
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள் ஒயரில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த சோமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வாலிபர் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? தானாகவே தூக்கு மாட்டிக் கொண்டாரா? இல்லை யாரேனும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டு சென்று விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.