திருத்துறைப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் விக்கிரபாண்டியத்தில் (ஆவாஸ் யோஜனா) பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் 19 வீடுகளை தனியார் ஒப்பந்ததாரர் தரமான முறையில் கட்டாமல் கட்டடப் பணியை பாதியில் விட்டு சென்றதாக தெரிவித்து. அதனைக் கண்டிக்கும் வகையில், விக்கிரபாண்டியம் கடை வீதியில் பாஜக மற்றும் பாதிக்கப்பட்ட பயனாளிகள் உள்ளிட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் இராகவன் ஒன்றிய தலைவர் அரவிந்த் பட்டியல் அணி மாநில துணை தலைவர் உதயகுமார் ஒன்றிய நிர்வாகிகள் பாராத்தீபன் நெம்மேலிகுமார் சிவக்குமார் அன்பு கவிராகாராத்தி இளையராஜா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்