கும்பகோணம், மே. 11 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில், அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்,  அதனைத்தொடர்ந்து அச்சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது..

மேலும் இதுக் குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரவீன்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடைப்பெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் பிரவீன்குமார் மீதான குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு  25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here