கும்பகோணம், ஏப். 23 –

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில் மின்வெட்டு சீராகும் என்றும் கும்பகோணத்தில் தெரிவித்தார்.

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதியில், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 2,500 சதுர அடியில், புதிய அலுவலகம் கட்ட, அடிக்கல் நாட்டுவிழா இன்று மாவட்ட தலைவர் டீ.ஆர் லோகநாதன் தலைமையிலும், மாநகராட்சி மேயர் கே சரவணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். முன்னதாக, உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், ஜி கே மூப்பனார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி,

தமிழக மின்வெட்டிற்கு, காரணமாக மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியதுடன், இந்த துறையிலும் மத்திய அரசு தோல்வி கண்டுகள்ளது என்றும், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால், மின்வெட்டு விரைவில் சீராகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 75வது  பவள ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு நடைபயணம், முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு தலைமையில் திருச்சியில் தொடங்கி, வரும் 30ம் தேதி வேதாரண்யத்தில் நிறைவு பெறுகிறது,  நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியின் தியாகத்தை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நடைபயண யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆளுநருக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தில், தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு எதிரானது அல்ல, அது தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு,  இதில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கே எஸ் அழகிரி மேலும் தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here