திருவாரூர், பிப். 22 –
திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வருகைத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வலங்கைமான் தாலூகா, கொட்டையூரில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து, திருவாரூர் சன்னதி தெருவில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அம்மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைச்சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக மேற்கூரையுடன் கட்டப்பட்டுள்ள நவீன நெல் சேகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சேமித்து வைக்கப்பள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் திரிவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.