ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப் பெற்றது.
இவ் விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் உறுப்பினருமான ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லுாரியின் முதல்வர் அமானுல்லா ஹமீது வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன் தமிழின் சிறப்பு குறித்து பேசினார். தமிழ்துறை பேராசிரியர் பாக்கியராஜ் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கோகுலன், துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். இவ் விழாவில் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ராஜாத்திஅப்துல்லா பரிசு வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை கல்லுாரியின் நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது மற்றும் சபியுல்லா செய்திருந்தனர்.