திருவள்ளூர், மே. 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி, மற்றொருவர் பலத்த காயத்துனடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் புதுமாவிலகை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தசரதன் (23). இவர் தனது நண்பருடன் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசவன்பாளையம் வழியாக திருவள்ளூர் திருத்தணி மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்றுக் கொண்டிருந்த போது  திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற கூட்ஸ் கேரியர் பொருத்திய கனரக வாகனம் மோதியதில் தசரதன் என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார்.

மேலும் அவருடன் வந்த அவரது நண்பருக்கு வலது காலில் எலும்பு முறிவும்   தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது மேலும் விபத்துக்குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், பலத்த காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகவும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்டய்னர் லாரி ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு சிறிது தூரம் சென்று வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here