இராசிபுரம், ஜூலை. 20 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சிலம்பரசன், 28. இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிலம்பரசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரின் குடும்பத்தினர் தடுத்துவிட்டனர். இந்தநிலையில், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த சிலம்பரசன் சேலம் – நாமக்கல் இடையே செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.