செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்வச்சதா திட்டத்தின் கீழ் பசுமை வளாக செயல்பாட்டு முயற்சியில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலைக்கல்லூரி மாவட்ட அளவில் முதன்மை பசுமை வெற்றியாளராக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆத்மா காந்தி தேசிய கிராமப் புற கல்வி சபை, உயர் கல்வி அமைச்சகம், இந்திய அரசு மூலம் ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதியை பெற்றுள்ளது .இக் கல்வி நிறுவனம் ஸ்வதச்சதா செயல் திட்டத்தின் படி சுகாதாரம் கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, எரிசக்தி மேலாண்மை மற்றும் பசுமை மேலாண்மை ஆகிய துறைகளில் செயல் திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தியுள்ளது. இதன் மூலம் முதன்மை வெற்றியாளர் என்ற விருது மற்றும் சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா கல்லூரியின் முதல்வர் சுமையா அவர்களிடம் வழங்கி பாராட்டினார். கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஜாஸ்மின், வணிக மேலாண்மை துறை தலைவர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.