ராமநாதபுரம், அக். 1-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை 2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு வடகிழக்கு பருவமழைக்காலமாகும். இந்த காலங்களில் நமக்கு கிடைக்ககூடிய மழையின் அளவில் 48 சதவீதம் மட்டுமே குடிநீருக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின் அளவு சராசரியை விட குறைந்து காணப்படுகிறது. எனவே பற்றாக்குறை மழையை வாம் எதிர்த்து போராடி வறட்சியை சமாளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்கனவே பல இடங்களில் ஏற்பட்டுள்ள பேரிடர்களின் போது சிறப்பாக பணியாற்றியவர்.  அரசு பேரிடர் மேலாண்மை என்பது மழை வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கக்கூடிய நிலையிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல்வேறு உபகரணங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் முன்னேச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை முன்னெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர பல்வேறு மாவட்டங்களுக்க அனுப்பி வைத்த சுற்றிக்கையின்படி, பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் துரிதமாக அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 நிலைகளில் முன்னேற்பாடுகள் பணிகளானது மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

அதன்படி பேரிடர் காலத்திற்கு முன், பேரிடரின் போது, பேரிடர் காலத்திற்கு பின் அனைத்து துறைகளின் வாயிலாக நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் நான்கு நிலைகளில் பாதிப்பு ஏற்படுக்கூடிய பகுதிகளை கண்டறிய மிகப் பாதிப்பு,பாதிப்பு, மிதமான பாதிப்பு மற்றும் பாதிப்பு குறைந்த பகுதிகள் என பிரித்து அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதிப்புகுள்ளாகும் பகுதிகளுக்கும் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, குழுக்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வினை அரசு அலுவலர்கள் உரிய வழிமுறையாக ஏற்படுத்த அனைத்து விதத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும்போது வலுவிழக்கவும் செய்யும், வலுப்பறவும் செய்யும், அவ்வாறு வலுப்பெறும்பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். முழுமையான பேரிடர் தடுப்பு என்பது ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இருப்பதே உண்மையான பேரிடர் தடுப்பு மேலாண்மையாக இருக்கும். இழப்பு ஏற்பட்டபின் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் இழப்பே இல்லாமல் இருப்பதுதான் உண்மையான பேரிடர் மேலாண்மையாகும். அரசு அலுவலர்கள், பொது மக்கள் தங்கள் தங்கள் உடைமைகளை இழந்துவாடும் தருவாயில் அவர்களை சமாதான அடைய செய்து அவர்களுக்கு இணக்கமாக ஆறுதல் கூறி மனிதாபிமானம் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் (திருவாடானை), சதன்பிரபாகர் (பரமக்குடி), சரவணன் (மதுரை தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்முன்னாள் வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here