ராமநாதபுரம், ஜூன் 3–
ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது.
மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார்.
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். தமுமுக மாநில பொதுச் செயலர் எஸ். ஹைதர் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு குறித்து விளக்கி பேசினார். தமுமுக முன்னாள் மாவட்ட தலைவர் அன்வர், முகவை சுல்தான், ஜஹரங்கீர், அபுதாகீர், ஆற்றாங்கரை அர்பன், கீழக்கரை சிராஜூதீன், முகவை பரக்கத்துல்லா, வழக்கறிஞர் ஆசிக், புருக் கான், பாகீர் அலி, ரஹ்மான், நகர் பொறுப்பு குழு தலைவர் புரோஸ் கான், பொறுப்பு குழு உறுப்பினர்கள் மன்சூர் அலி, சதக் தம்பி, பாரிக், ராஜா முகமது, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகபூபதி, இன்ஜினியர் கபீர் உள்பட பலர் பங்கேற்றனர்.