தஞ்சாவூர், ஏப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தஞ்சை பர்மா நகர் 8 வது தெருவில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பாகம் எண் 143, 145  ஆகிய இரண்டிலும் பொது மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சென்று உள்ளனர்.

அப்போது  உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறியதால் அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேப் போல் இந்த வாக்குசாவடியில்  மட்டும் சுமார் 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் தெரிவிக்கும் போது இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்தும் தங்களது பெயர் பட்டியலில் இல்லை என வாக்களிக்க சென்று வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் புலம்புகின்றனர். மேலும் தங்களது ஜனநாயக கடைமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here