பொன்னேரி, ஜூன். 11 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் காவேரி அம்மாள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டு ஒரு மாத காலமாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவர்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கல்லூரிக்குள் நுழைந்தனர். பின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அந்தோனி டேவிட் நாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை ஏற்று ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குனர் சுருளி முருகானந்தன் உடற்கல்வி துறை ஆண்டறிக்கை வாசித்தார். கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் திருச்சேரன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சித் தொகுப்பினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் குளோரி வழங்கினார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.