பொன்னேரி, ஏப். 10 –

  பொன்னேரியில் புரட்சிப்பாரதம் கட்சியின் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி நகரம் சார்பில் நகர தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர்.சே.ராஜா கலந்துக் கொண்டு அண்ணல் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, புரட்சி பாரதம் கட்சியின் கொடியினை ஏற்றி நிகழ்ச்சிக்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த பூவை மூர்த்தியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் பூவை மூர்த்தியார் சாதனைகளை விளக்கும் விளக்க கையேட்டு புத்தகத்தை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் மதி, சேட்டு, ஜெயசீலன், சரவணன், ஆசாத், மணி, நாகராஜ், கௌதம், சண்முக பிரியன், குமார் சதீஷ் மூர்த்தி, பாபு, நாகராஜ், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here