பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு, தேர் திருவிழா, என நடைபெற்றது. அவ்விழாவின் மேலும் முக்கிய நிகழ்வான சித்திரை தெப்ப பிரமோற்சவ விழா நேற்று இரவு நடைபெற்றது.
அவ்விழாவில் அருள்மிகு ஸ்ரீகரி கிருஷ்ண பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன், திருக்கோவில் குளத் தெப்பத்தில் அமர்ந்த படி மூன்று முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டு அத் தெப்ப பிரமோற்சவ விழாவினைக் கண்டு மகிழ்ந்து பகவானை தரிசனம் செய்தனர்.