சென்னை, ஜன. 22 –

      சென்னை அடுத்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டாரப் பதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

   இந்நிலையில் சித்தாலப்பாக்கம் மலையடிவாரம் அருகே மர்ம நபர் ஒருவர் கஞ்சா விற்பணை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

   அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்த தனிப்படை போலீசார் அவரை பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

   விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை வடபழனியை சேர்ந்த ஷியாம் பிரசாத் (30) என்பதும் அவரிடமிருந்து 1.800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில், ஷியாம் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here