தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகையால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
கோயிலுக்கு வந்த பொதுமக்களின் கூட்டங்களை கட்டுப்படுத்த ராஜதானி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. அதனால் மாவூற்று வேலப்பரை காண வந்த பக்தர்களும் பொதுமக்களும் எவ்வித சிரமங்கள் இன்றி இறைவனை மகிழ்ச்சியுடன் வழிப்பட்டுச் சென்றனர்.