கும்பகோணம், ஆக. 08 –

கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை திருமஞ்சனவீதி, யூசுப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 48 சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எனவும் மேலும், சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் மற்றும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கப்படவில்லை, இனிமேலும் காலம் கடத்தினால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

சிறுபான்மையினர் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா உடனே வழங்க கோரி  கோட்டாட்சியர் லதாவிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் லெனி னிஸ்ட் விடுதலை சார்பில் மாவட்டச் செயலாளர் கண்ணையன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here