திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது.
நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம் பதிவு செய்யக்கோரியது தொடர்பாக 2 மனுக்களும் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பெறப்பட்ட மனுக்களில் 5 எண்ணிக்கையில் பதிவுத்துறையின் நில அபகரிப்பு தொடர்பாக 1 மனுவும், பதிவுத்துறையின் பிற சேவை தொடர்பாக 4 மனுக்களும் பெறப்பட்டன. இம்மனுக்களில் நில அபகரிப்பு தொடர்பான மனுக்கள் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு இரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கோ.அறிவழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.