திருவண்ணாமலை, அக்.26-

திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது.

நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம் பதிவு செய்யக்கோரியது தொடர்பாக 2 மனுக்களும் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பெறப்பட்ட மனுக்களில் 5 எண்ணிக்கையில் பதிவுத்துறையின் நில அபகரிப்பு தொடர்பாக 1 மனுவும், பதிவுத்துறையின் பிற சேவை தொடர்பாக 4 மனுக்களும் பெறப்பட்டன. இம்மனுக்களில் நில அபகரிப்பு தொடர்பான மனுக்கள் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு இரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கோ.அறிவழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here