பந்தநல்லூர், மார்ச். 13 –

கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர்  குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் அம்மாணவி நேற்று மாலையில் வீட்டில் இருந்தவர் வெளியே விளையாட சென்றதாக தெரிய வருகிறது. மேலும் அம்மாணவி வெகு  நேரமாகியும் வீடுத் திரும்பாமலும், மேலும் நேற்றிரவு  இரவு வரை வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பதட்டமுற்ற அச்சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் மகளை  தேடியும், விசாரித்தும் உள்ளனர். தொடர்ந்து சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால், அவர்கள்  பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த  நிலையில், இன்று கொடியாலம் பகுதியில் உள்ள பழவாறு ஆற்று தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

மேலும் சிறுமியின் உடலை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் சிறுமியின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here