பொன்னேரி, மே. 19 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மௌன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பொன்னேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, பொன்னேரி நகர தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர். முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு வெள்ளை துணிகளை வாயில் கட்டி மௌன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மேலும் எந்த சட்டங்கள் பேரறிவாளனை குற்றவாளி என நிரூபித்து சிறையில் அடைத்தது.. அதே சட்டம் நாளடைவில் அதில் ஒரு நுணுக்கத்தை கண்டுப் பிடித்து விடுதலை செய்கிறது அந்த விடுதலையை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூறினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here