அவனியாபுரம்:

மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.

பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார்.
அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் காத்திருந்து சந்தித்து பேசினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என இதுவரை தெரியவில்லை.

பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திடம், அமித்ஷா கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here