சென்னை, செப். 03 –

பல க்ரைம் திரில்லர் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தாலும்,  இத்திரைப்படம் புதிய திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைக் காணயிருக்கிறது ”நாட் ரீச்சபிள்” என்ற தமிழ் திரைப்படம்  இப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் எதிர் வரும் செப் 9 ல் வெளி வர உள்ளது.

இத்திரைப்படத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை  தமிழ்ப்பட ரசிகர்கள் சற்றும் யூகிக்க முடியாத வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ரசிகர்களை இருக்கையின் முனைக்கு நகர்த்தும்  வகையில்  ”நாட் ரீச்சபிள்”  க்ரைம் த்ரில்லர் படம் இருக்கும் என திரைப்பட வட்டாரத்தில் பேசு பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு முருகானந்தம் எழுதி இயக்கியுள்ளார், மேலும் அவர் கடந்த காலங்களில் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்ததில்லை இருப்பினும் பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

மேலும், இப்படத்தினை க்ராக்பெயின் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் எதிர் வரும் செப்டம்பர் 9, 2022 அன்று  தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக  நடிகர்  விஷ்வா ஸ்ரீதரன் மற்றும்  சாய் தன்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜயன், சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா மற்றும் சாய் ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரண் குமாரின் இசையும், சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும்  “திரைக்கதை தனித்துவமானது மற்றும் கொலைக்கான காரணம் சந்தேகத்திற்கு இடமின்றி புதிய அடிப்படை காரணத்தைக் கொண்டுள்ளது என இயக்குனர் சந்துரு கூறினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here