கும்பகோணம், செப். 11 –

கும்பகோணம் அருகே கோவில்சன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் நடந்து  5 நாளே ஆன நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவில் சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரசாத் வயது 30 இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பியவர் ஆவார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 5ம் தேதி பந்தநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களாக மனைவி சுகன்யாவிடம் சரியாக பேசாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனை பிரசாத் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டவர் தூக்கு போட்டு கொண்டார். உடனடியாக அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு ஏற்கனவே பிரசாத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமணமான 5 நாளிலேயே புது மாப்பிள்ளை இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here