இராசிபுரம், ஜூலை. 24 –
மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பெரிய மணலி அருகே உள்ள ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த வருதராஜன் மகன் வேல்முருகன் 28, கோழிப்பண்ணை சூப்பர்வைசர். வேப்பம்பட்டி புதூரை சேர்ந்த கதிர்வேல் மகன் அப்பு 32. டிரைவர். என்பது தெரிய வந்துள்ளது.
இறந்து போன இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் கடந்த வியாழன் முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்விருவர் உடல் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.