கும்பகோணம், மார்ச். 30 –
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரேகாராணி விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மேலும், காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் காவல்துறையினர் மலையப்ப நல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரவி என்பவருடைய மகன் சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். அதே போல் செம்பியவரம்பல் ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்த திருநரையூர் பாஸ்கர் என்பவருடைய மகன் தினேஷ்குமார் என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்தும் அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.