பாபநாசம், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்..

பாபநாசம் தாலுக்கா, திருமண்டங்குடி  பகுதியில் கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் அருள்மணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி பறக்கும் படை வாகனம் முன்னேறி சென்று கொண்டிருந்த போது . அதனை சற்றும் எதிர்பாராத சில மர்ம நபர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த ரூ.4410 பணத்தினை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடி மறைந்துள்ளனர்.

மேலும் அப்பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் அப்பணத்தை ஒப்படைத்தனர். மேலும் தப்பிவோடிய மர்ம நபர்கள் யார் என்பதுக் குறித்தும் மேலும் பணத்தை ஏன் தூக்கி வீசி விட்டுச் சென்றனர் என்பதுக் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here