தஞ்சாவூர், ஏப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி  சுயேட்சை, உள்பட 12பேர் போட்டியிடுகின்றனர்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 932 பெண் வாக்காளர்கள். மற்றும் 128 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர்.

தஞ்சை யாகப்பா நகரில் உள்ள ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  வேட்பாளர்கள் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைப்பெற்றது. பின்னர் மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here