பொன்னேரி, ஆக. 24 –

பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மின்மாற்றியினை இயக்கி வைத்து மின்சார இணைப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன் ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர். மீஞ்சூர் நகர கழக திமுக செயலாளர் தமிழ் உதயன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here